கோடை சீசனை முன்னிட்டு உதகையில் புகைப்பட கண்காட்சி இன்று தொடக்கம்

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், இதன் ஒரு பகுதியாக உதகையில் புகைப்பட கண்காட்சி இன்று தொடங்கியது.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், இதன் ஒரு பகுதியாக உதகையில் புகைப்பட கண்காட்சி இன்று தொடங்கியது.



 

ஒவ்வொரு ஆண்டும் நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில், சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில், பல்வேறு சுற்றுலாத் தலங்களில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என நடத்தப்படுவது வழக்கம். 



இதில், அரசு தோட்டக்கலை மையத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் புகைப்படக் கண்காட்சி இன்று தொடங்கப்பட்டது. 



இந்தப் புகைப்பட கண்காட்சியில் பறவைகள், வன உயிரினங்கள், பல்லுயிர் புகைப்படங்கள் என அனைத்தும் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு புகைப்படமும் கலைநயத்துடன் மட்டுமல்லாமல் உயிரோட்டமாய் புகைப்படக் கலைஞர்கள் எடுத்திருப்பது பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்தது. 



மேலும், இதில் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையை குறிக்கும் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்ததை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். ஒரு மாதம் நடைபெறும் இந்த புகைப்பட கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...