கோவை மாவட்ட பள்ளி பேருந்துகளை வரும் 21-ம் தேதி ஆய்வுக்குட்படுத்த உத்தரவு

கோவை : கோவை மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் பள்ளி பேருந்துகளை வரும் 21-ம் தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான கூட்டாய்வு குழு முன்பு ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை : கோவை மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் பள்ளி பேருந்துகளை வரும் 21-ம் தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான கூட்டாய்வு குழு முன்பு ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டத்தில் மொத்தம் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கோவை மையம், தெற்கு, வடக்கு மற்றும் மேற்கு என 6 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும், சூலூர் மற்றும் வால்பாறையில் 2 பகுதி அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 340 பள்ளிகளுக்கு 2,015 பள்ளிப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், கோவை மாநகரத்தில் மட்டும் 1,172 பள்ளிப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

இந்த நிலையில், சென்னை போக்குவரத்து ஆணையர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், பள்ளிப் பேருந்துகள் சரியான நிலையுடன் இருக்கின்றனவா என மாவட்ட அளவிலான கூட்டாய்வு குழு மூலம் ஆய்வு செய்யப்படுகிறது. வரும் 21-ம் தேதி நடக்கும் இந்த கூட்டாய்வின் போது அனைத்து பள்ளி வாகனங்களையும் ஆஜர்படுத்த வேண்டும். 

கோவை மாநகரத்திற்குட்பட்ட 1,172 பள்ளிப் பேருந்துகள் காலை 9 மணி முதல் டாக்டர் பாலசுந்தரம் சாலை உள்ள பி.ஆர்.எஸ். மைதானத்திலும், பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பள்ளி வாகனங்கள் 469 அலுவலக வளாக மைதானத்திலும், மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட 374 பள்ளி வாகனங்கள், மேட்டுப்பாளையம் சவீதா மருத்துவமனை அருகில் உள்ள மைதானத்திலும் கூட்டாய்வு செய்யப்பட உள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...