அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வேண்டும் : அ.ம.மு.க. செய்தி தொடர்பாளர் புகழேந்தி வலியுறுத்தல்

கோவை : கமலஹாசனின் நாக்கை அறுப்பேன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவது சரியல்ல என்றும், அவ்வாறு பேசிய அமைச்சரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அ.ம.மு.க. செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.


கோவை : கமலஹாசனின் நாக்கை அறுப்பேன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவது சரியல்ல என்றும், அவ்வாறு பேசிய அமைச்சரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அ.ம.மு.க. செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.



கோவையில் அ.ம.மு.க. செய்தி தொடர்பாளர் புகழேந்தி சவுரிபாளையத்தில் உள்ள அவரது உறவினர் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- பிரச்சாரத்தின் போது எப்படி பேச வேண்டும் என தெரியாமல் பேசுகின்றனர். அமைச்சர் பதவியில் இருப்பவர் நாக்கை அறுத்துவிடுவோம் என்று பேசுவது சரியல்ல. கமலஹாசன் தெரிவித்த கருத்து தவறு என்றால், தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கலாம். ஆனால், அதைவிடுத்து இப்படி பேசுவது சரியல்ல. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிணமறுக்கும் இடத்தின் மந்திரியா..?, தமிழகத்தின் மந்திரியா..?.

இதை பார்த்து விட்டும் முதலமைச்சரும் அமைதியாக இருக்கின்றார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை உடனடியாக கைது செய்ய வேண்டும். மந்திரி பதவிக்கு தகுதியில்லாதவர் ராஜேந்திர பாலாஜி. அவரை கைது பண்ணிட வேண்டும். இல்லையெனில், நாளை முதலமைச்சரின் நாக்கறுப்பேன் என்று கூட சொல்லாம்.

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மூன்றாவது அணி எல்லாம் கிடையாது. அவர் பா.ஜ.க.வின் ஜால்ரா. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டு, ஸ்டாலின் ஏன் சந்திரசேகர ராவை சந்திக்கின்றார். ஸ்டாலின் - சந்திரசேகர் ராவ் சந்திப்பு குழப்பமான சந்திப்பாகவே நாங்கள் கருதுகின்றோம்.

அதேபோல, நாக்கறுப்பேன் என்று பேசும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்தை ஏன் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டிக்கவில்லை. ஜெயலலிதா சாவில் மர்மம் என தெரிவிக்கும் ஓ.பி.எஸ், ஏன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகவில்லை. முதலமைச்சர் இப்பொழுதெல்லாம் ஸ்டாலின், தினகரனுக்கு பதில் சொல்வதில்லை. உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டும் பதில் சொல்கின்றார். அந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போய்விட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

முதலமைச்சர் பதவி கொடுத்தது சசிகலாவா..? இல்லையா..? என்பதை முதலமைச்சர் பழனிசாமி விளக்க வேண்டும். வரும் 23-ம் தேதி தேர்தல் முடிவிற்குப் பின்னர் எவ்வளவு பாலங்களில் என்ன மோசடி என்பது குறித்த பட்டியலை வெளியிடுவோம். 4 அல்லது 5 அமைச்சர்கள் சிறைக்கு போவதை யாராலும் தடுக்க முடியாது, எனத் தெரிவித்தார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...