வனப்பகுதியில் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டிகள் சேதமடைந்த அவலம் : தண்ணீரை தேடி கிராமங்களை நோக்கி யானைகள் படையெடுக்கும் அபாயம்

கோவை : ஆனைகட்டி அருகே வன விலங்குகளுக்காக வனப் பகுதிகளில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகள் முறையாக பராமரிக்காததால், மனித - விலங்குகள் மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை : ஆனைகட்டி அருகே வன விலங்குகளுக்காக வனப் பகுதிகளில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகள் முறையாக பராமரிக்காததால், மனித - விலங்குகள் மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

கோடை காலம் தொடங்கிவிட்டதால் வனங்களில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், தண்ணீரின்றி அவதிப்படும் வனவிலங்குகள், குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருகின்றன. எனவே, இதனை தடுக்கும் வகையில், கோவை மாவட்டத்திற்குட்பட்ட ஆனைக்கட்டி வனப்பகுதியில் வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்கும் வகையில், துமனூர் பழங்குடியின கிராமத்தில் இரண்டும், கூட்டுப்புலிக்காடு, சலிம் அலி இயற்கை வரலாறு பறவைகள் மையம் மற்றும் ஆலமரமேடு ஆகிய பகுதிகளில் தலா ஒரு தொட்டியும் என மொத்தம் 5 தண்ணீர் தொட்டிகள் வனத்துறையினர் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஆலமரமேடு பகுதியில் உள்ள தொட்டியைத் தவிர்த்து பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 4 தண்ணீர் தொட்டிகள் சேதமடைந்துள்ளன. 



இதேபோல, ஆனைகட்டி மெயின் ரோட்டில் உள்ள ஆலமரமேடு பகுதியின் அருகே ஒரு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொட்டியில் தனியார் விவசாயப் பண்ணையின் உரிமையாளர் நீர் நிரப்பி வந்தார். ஆனால், தொட்டிக்கு செல்லும் தண்ணீர் குழாயில் தற்போது மிகப்பெரிய அடைப்பு ஏற்பட்டுள்ளதால், தண்ணீர் தொட்டி வறண்டு காட்சியளிக்கிறது. இந்த சூழலில் யானை உள்ளிட்ட மிகப்பெரிய உருவம் கொண்ட விலங்குகள் தண்ணீர் அருந்த அருகே உள்ள தனியார் செங்கல் சூளையில் உள்ள தொட்டிக்கு செல்வதால், மனித - விலங்குகள் மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு சாலையைக் கடந்து வரும் விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

"நிறைய விலங்குகள் வாகனங்களில் அடிபடுகின்றன. அண்மையில் சாலையைக் கடந்து சென்ற யானை வேகமாக வந்த காரில் மோதி விபத்துக்குள்ளானது. மேலும், சிறு உயிரினங்கள் நாள்தோறும் வாகனங்களில் அடிபட்டு உயிரை இழக்கின்றன," என்கிறார் ஆலமரமேடு பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசி.

"இதுபோன்ற நிலையில் உள்ள தண்ணீர் தொட்டிகளை வனத்துறையினர் முறையாக பராமரிப்பதில்லை. இதனை முறையாக கண்டு பராமரித்தால், மனித விலங்குகள் மோதலை தடுக்கலாம்," என சமூக ஆர்வலர் கருத்து தெரிவித்துள்ளார். 

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...