Breaking : கோவையில் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் 2 இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு

கோவை : கோவை - அவினாசி சாலையில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், முன்விரோதம் காரணமாக இரண்டு இளைஞர்களை அரிவாளில் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : கோவை - அவினாசி சாலையில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், முன்விரோதம் காரணமாக இரண்டு இளைஞர்களை அரிவாளில் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை கணபதி பழைய சக்தி சாலை காமராஜர் நகரைச் சேர்ந்தவர்கள் பிரதீப் மற்றும் தமிழ்வாணன். இவர்கள் இருவரும் அடிதடி வழக்கில் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இரண்டில் கையெழுத்திட்டு வந்தனர். இந்த நிலையில், இன்று இருவரும் வழக்கம்போல கையெழுத்திட்டுவிட்டு அவினாசி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. சர்ச் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை பின்தொடர்ந்து 2 இரண்டு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளைக் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், இளைஞர்கள் இருவரும் நிலை தடுமாறி மயங்கிவுடன் அந்த கும்பல் தப்பிச் சென்று விட்டனர். 



இதையடுத்து, தகவலறிந்து வந்த பந்தய சாலை போலீசார் இருவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். மேலும், இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உதவி ஆணையாளர் எழிலரசு மற்றும் பந்தய சாலை காவல் ஆய்வாளர் தெய்வசிகாமணி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சதீஷ் ,ஹரி, தனபால் ,சூர்யா ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் நடைபெற்ற இந்த கத்திக்குத்துச் சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...