திருப்பூரில் பெற்ற மகளையே பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

திருப்பூர் : திருப்பூரில் சொந்த மகளையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தைக்கு போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள்தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருப்பூர் : திருப்பூரில் சொந்த மகளையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தைக்கு போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள்தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருப்பூர் கருவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவருக்கு ஒரு பெண், இரண்டு ஆண் மகன்கள் உள்ளனர். இவரது மனைவி இறந்த நிலையில், குழந்தைகளை கவனிக்க முடியாத காரணத்தால் விடுதி ஒன்றில் சேர்ந்திருந்தார். இந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு விடுதிக்கு சென்ற பாலசுப்பிரமணியம் குழந்தைகளை கோவில் செல்ல வேண்டும் என கூறி அழைத்து வந்து 12வயதான தனது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மறுநாள் விடுதியில் கொண்டு போய் விட்டுள்ளார். தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை விடுதி நிர்வாகிகளிடம் அச்சிறுமி கூறியதை அடுத்து, திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் திருப்பூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, போக்சோ சட்டத்தின் கீழ் பாலசுப்பிரமணியத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து பாலசுப்பிரமணியம் சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...