சாலை பராமரிப்பு பணியினை தனியாருக்கு கொடுப்பதைக் கண்டித்து மே 28-ம் தேதி உள்ளிருப்பு போராட்டம் : நெடுஞ்சாலை சாலைப்பணியாளர் சங்கம் அறிவிப்பு

திருப்பூர் : சாலை பராமரிப்பு பணியினை தனியாருக்கு கொடுப்பதை கண்டித்து மே 28-ம் தேதி சென்னையில் நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் அலுவலகத்தில் குடும்பத்துடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக திருப்பூரில் நெடுஞ்சாலை சாலைப்பணியாளர் சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : சாலை பராமரிப்பு பணியினை தனியாருக்கு கொடுப்பதை கண்டித்து மே 28-ம் தேதி சென்னையில் நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் அலுவலகத்தில் குடும்பத்துடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக திருப்பூரில் நெடுஞ்சாலை சாலைப்பணியாளர் சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.



தமிழ்நாடு நெடுஞ்சாலை சாலைப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் திருப்பூர் மங்களம் சாலையில் உள்ள கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் நடைபெற்றது. இதில், அச்சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டார். இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- பொள்ளாட்சி சாலை பராமரிப்பு பணியினை தமிழக அரசு தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது அரசே பராமரிக்கும்போது ரூ. 88 கோடி மட்டுமே செலவாகும். ஆனால், தனியார் நிறுவனத்திற்கு பணியினை வழங்கியுள்ள நிறுவனத்துடன் ரூ. 247 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடைநிலை ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தாமல் அவர்களை வஞ்சித்து வருகிறது.



இதேபோல், 6 மாவட்ட சாலை பராமரிப்பு பணிகளை தனியாருக்கு ஒப்பந்தம் செய்துள்ள தமிழக அரசின் இந்த நடைமுறையை கண்டித்து மே 28-ம் தேதி குடும்பத்துடன் சென்னையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம், என தெரிவித்தார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...