கோவை : பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் யாராவது தற்கொலை செய்து கொண்டனரா..? என்ற கோணத்தில் சி.பி.ஐ. போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
கோவை : பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் யாராவது தற்கொலை செய்து கொண்டனரா..? என்ற கோணத்தில் சி.பி.ஐ. போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்த குமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கானது பொள்ளாச்சி காவல் நிலைய விசாரணையிலிருந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேலும், போலீசார் கைது செய்யப்பட்டுள்ள அனைவரின் மீதும் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கையும் இணைத்தனர். பின்னர், பல்வேறு கோரிக்கைகளுக்கு பின் இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ. போலீசார் கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அந்தந்த காவல்நிலையங்களுக்கு கூட தகவல் தெரியாதபடி மறைமுகமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள தனியார் மருத்துவமனைகளில் பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றவர்களில் பட்டியலையும் நோயாளிகளின் விவரங்களையும் பெற்றுச் சென்றுள்ளனர். அந்தப் பட்டியலில் இளம் பெண்கள் யாராவது தற்கொலை முயற்சி செய்திருக்கிறார்களா..?, தற்கொலை செய்து உள்ளார்களா..? மற்றும் அவர்கள் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களா..? என்ற கோணத்தில் சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்த குமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கானது பொள்ளாச்சி காவல் நிலைய விசாரணையிலிருந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேலும், போலீசார் கைது செய்யப்பட்டுள்ள அனைவரின் மீதும் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கையும் இணைத்தனர். பின்னர், பல்வேறு கோரிக்கைகளுக்கு பின் இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ. போலீசார் கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அந்தந்த காவல்நிலையங்களுக்கு கூட தகவல் தெரியாதபடி மறைமுகமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள தனியார் மருத்துவமனைகளில் பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றவர்களில் பட்டியலையும் நோயாளிகளின் விவரங்களையும் பெற்றுச் சென்றுள்ளனர். அந்தப் பட்டியலில் இளம் பெண்கள் யாராவது தற்கொலை முயற்சி செய்திருக்கிறார்களா..?, தற்கொலை செய்து உள்ளார்களா..? மற்றும் அவர்கள் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களா..? என்ற கோணத்தில் சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.