கோவை : ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரக் கிளை சார்பில் கரும்புக்கடை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ‘இஃப்தார்-நோன்பு துறக்கும்’ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
கோவை : ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரக் கிளை சார்பில் கரும்புக்கடை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ‘இஃப்தார்-நோன்பு துறக்கும்’ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வின் துவக்கமாக உலகெங்கிலும் தீவிரவாத செயல்களினால் உயிரிழந்த, குறிப்பாக சமீபத்தில் இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் உயிரிழந்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரத் தலைவர், ஜனாப் பி.எஸ்.உமர் பாரூக் தலைமையுரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், பல்வேறு சமயச் சான்றோர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், சமுதாயப் பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

வந்திருந்த அனைவருக்கும் தொழுகைப் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர், அவர்களுக்கு இரவு உணவு விருந்தும் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்வின் துவக்கமாக உலகெங்கிலும் தீவிரவாத செயல்களினால் உயிரிழந்த, குறிப்பாக சமீபத்தில் இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் உயிரிழந்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரத் தலைவர், ஜனாப் பி.எஸ்.உமர் பாரூக் தலைமையுரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், பல்வேறு சமயச் சான்றோர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், சமுதாயப் பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

வந்திருந்த அனைவருக்கும் தொழுகைப் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர், அவர்களுக்கு இரவு உணவு விருந்தும் வழங்கப்பட்டது.
