கோவை : மேட்டுப்பாளையத்தில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவை : மேட்டுப்பாளையத்தில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த சில மாதங்களாகவே வெயில் வாட்டி வந்த நிலையில், அக்னி நட்சத்திரம் தொடங்கியதுடன் வெயிலின் தாக்கமும் மிக கடுமையாக இருந்தது. காலை 11 மணி முதல் மாலை வரை பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் வெளியே நடமாட முடியாமல் தவித்து வந்தனர். நீலகிரி மலை மாவட்ட அடிவாரப் பகுதியாக இருந்தும் கூட அங்கு மழை பெய்யும் போது, இங்கும் அதன் தாக்கம் இருக்கும். ஆனால், இந்தாண்டு அது முற்றிலும் மாறுபட்டு, மேட்டுப்பாளையம் மழையின்மையால் கடுமையாக வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேட்டுப்பாளையத்தின் புறநகர் பகுதிகளில் மழையினாமையால் வறட்சி ஏற்பட்டதுடன், கால்நடை மேய்ச்சல் நிலங்களில் முற்றிலும் வறண்டு காய்ந்து கிடந்தது.

இந்த நிலையில், இன்று மாலை கருமேகம் சூழ்ந்து கடுமையான இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரமாக மழை கொட்டி தீர்த்தது. இடை விடாது ஒரு மணி நேரமாக வெளுத்து வாங்கிய மழை காரணமாக சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது. கடுமையான வெயிலின் தாக்கத்தால் அவதியடைந்த பொதுமக்கள் இன்று பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.