பார்சலை டெலிவரி செய்யாத கூரியர் நிறுவனத்திற்கு ரூ. 1 லட்சம் அபராதம் : பாதிக்கப்பட்டவர் தொடர்ந்த வழக்கில் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

பார்சலை டெலிவரி செய்யாததால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க ஃபர்ஸ்ட் பிளைட் கூரியர் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பார்சலை டெலிவரி செய்யாததால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க ஃபர்ஸ்ட் பிளைட் கூரியர் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவையில் செயல்பட்டு வரும் டேட்டா ஃபீல்டு இந்தியா பிரைவேட் லிமிடேட் நிறுவனம், கடந்த 2015-ம் ஆண்டு தங்களது தயாரிப்புத் துறைக்கு தேவையான சார்ஜர் கேபிள் உதிரி பாகங்களை சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து வாங்கியது. அந்நிறுவனமும் அசல் பில் ரசிது உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை, அந்த உதிரி பாகங்களுடன் சேர்த்து ஃபர்ஸ்ட் பிளைட் கூரியரிர் மூலமாக அனுப்பியது.

2 நாட்களில் வந்து சேர வேண்டிய பார்சல் நீண்ட நாட்களாகியும் வராததால், சம்பந்தப்பட்ட கோவை மற்றும் சென்னையில் உள்ள ஃபர்ஸ்ட் பிளைட் கூரியர் அலுவலங்களுக்கு அடுத்தடுத்த புகார்களை நேரிலும், மின்னஞ்சல் மூலமாகவும் டேட்டா ஃபீல்டு இந்தியா பிரைவேட் லிமிடேட் நிறுவனம் அளித்தது. ஆனால், கூரியர் நிறுவனம் எந்த பதிலும் அளிக்காமல் அலட்சியம் காட்டி வந்தது. பின்னர், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

இதனால், டேட்டா ஃபீல்டு இந்தியா பிரைவேட் லிமிடேட் நிறுவனம், சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனம் மீது கடந்த 2015-ம் ஆண்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த 8-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, பார்சலை டெலிவரி செய்யாததால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் 9 சதவீத வட்டியுடன் சேர்த்து ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க ஃபர்ஸ்ட் பிளைட் கூரியர் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. மேலும், வழக்கு செலவு ரூ. 3,000 செலுத்தவும் ஆணையிட்ட நீதிபதிகள், 2 மாதத்திற்குள் இந்த தொகையை செலுத்த வேண்டும் என கெடு விதித்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...