மக்களை பற்றி சிந்திக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நீடிக்க வேண்டும் : சூலூரில் சரத்குமார் பேச்சு

கோவை : மக்களை பற்றி சிந்திக்கக் கூடிய அரசுதான் ஆட்சி செய்ய வேண்டும் என்பதால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நீடிக்க வேண்டும் என சூலூரில் நடந்த பிரச்சாரத்தின் போது சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.


கோவை : மக்களை பற்றி சிந்திக்கக் கூடிய அரசுதான் ஆட்சி செய்ய வேண்டும் என்பதால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நீடிக்க வேண்டும் என சூலூரில் நடந்த பிரச்சாரத்தின் போது சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

கோவை சூலூரில் அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமிக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது :- இந்த தேர்தல் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சொல்கின்றார். ஆனால், இந்த ஆட்சி நிச்சயம் தொடரும். கடந்த 2 ஆண்டு காலமாக தொலைநோக்கு சிந்தனையுடன் இந்த ஆட்சி செயல்பட்டு வருகின்றது. நீண்டகால கோரிக்கையான அவினாசி - அத்திகடவு திட்டத்தை செயல்படுத்தியவர் எடப்பாடி பழனிசாமி. பெண்களுக்காக பல திட்டங்களை இந்த அரசு கொண்டு வந்துள்ளது. மக்களை பற்றி சிந்திக்கக் கூடிய அரசுதான் ஆட்சி செய்ய வேண்டும். அதனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நீடிக்க வேண்டும். ஸ்டாலின் கனவிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். பிரியாணி கடையில் வன்முறை செய்யும் கட்சியாக தி.மு.க. இருக்கின்றது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையில் காற்றை கூட ஊழல் செய்து 1.76 லட்சம் கோடியினை அவர்கள் சம்பாதித்துள்ளார்கள். மேலும், சட்டம் ஒழுங்கு இந்த மாநிலத்தில் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கின்றது. இந்த அரசு தொடர அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும், என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...