திருப்பூர் : தமிழ் பண்பாட்டு மையம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கான பனை ஓலையால் கைவினைப்பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
திருப்பூர் : தமிழ் பண்பாட்டு மையம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கான பனை ஓலையால் கைவினைப்பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
பொதுத்தேர்வுகள் முடிவுற்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், அவற்றை மாணவர்கள் பயனுள்ளதாக மாற்றும் வகையில் தமிழ் பண்பாட்டு மையம் சார்பில் வாரந்தோறும் இலவச கோடைகால பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக, இந்த வாரம் குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்ச்சியும், பனை ஓலை மூலம் பொம்மைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் தயார் செய்யும் பயிற்சி முகாமும் நடைபெற்றன. குழந்தைகளிடம் கதைகளின் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், இசை மற்றும் பாடல்கள் மூலம் கதை சொல்லப்பட்டது. அதேபோல, பனை ஓலைகள் மூலம் குழந்தைகள் தாங்களாகவே தங்களது விளையாட்டுபொருட்களை தயார் செய்யும் பயிற்சியும் வழங்கப்பட்டது. இதில், மாணவர்கள் காற்றாடி, கண் கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆர்வத்துடன் செய்து அசத்தினர்.

பொதுத்தேர்வுகள் முடிவுற்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், அவற்றை மாணவர்கள் பயனுள்ளதாக மாற்றும் வகையில் தமிழ் பண்பாட்டு மையம் சார்பில் வாரந்தோறும் இலவச கோடைகால பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக, இந்த வாரம் குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்ச்சியும், பனை ஓலை மூலம் பொம்மைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் தயார் செய்யும் பயிற்சி முகாமும் நடைபெற்றன. குழந்தைகளிடம் கதைகளின் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், இசை மற்றும் பாடல்கள் மூலம் கதை சொல்லப்பட்டது. அதேபோல, பனை ஓலைகள் மூலம் குழந்தைகள் தாங்களாகவே தங்களது விளையாட்டுபொருட்களை தயார் செய்யும் பயிற்சியும் வழங்கப்பட்டது. இதில், மாணவர்கள் காற்றாடி, கண் கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆர்வத்துடன் செய்து அசத்தினர்.
