கோவை : சூலூர் இடைத்தேர்தலை முன்னிட்டு, 12 அம்சங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். அதாவது,
கோவை : சூலூர் இடைத்தேர்தலை முன்னிட்டு, 12 அம்சங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். அதாவது,
- மக்களின் நலனுக்காக எம்.எல்.ஏ.வின் ஊதியம் பயன்படுத்தப்படும்.
- ஆனைமலையாறு -நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற மக்கள் நீதி மய்யம் நடவடிக்கை எடுக்கும்.
- நெசவு மற்றும் நூற்பாலைகள் இருப்பதால் தீயணைப்பு நிலையம் சுல்தான் பேட்டை அல்லது செஞ்சேரி மலையில் அமைக்கப்படும்.
- இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதுடன், ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படும்.
- அத்திக்கடவு அணையில் இருந்து சுத்தமான தண்ணீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க மக்கள் நீதி மய்யம் நடவடிக்கை எடுக்கும்.
- நொய்யல் ஆற்றின் கூடுதல் நீர் போகம்பட்டி, பொன்னாங்கண்ணி மற்றும் வரப்பட்டி பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு திருப்பி விடப்படும்.
- கால்நடைகளுக்கான தீவனங்களின் விலை குறைத்து வழங்கப்பட்டு, விவசாயிகள் இலாபம் ஈட்டுவதுடன், பால் விலை குறைக்கப்படும்.
- அனைத்து வீடுகளுக்கும் சோலார் பொருத்தப்பட்டு, இரவு நேரங்களிலும் நெசவு தொழில் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நெசவு தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரிக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரல் கொடுக்கும்.
- கைத்தறி மற்றும் விசத்தறிகளுக்கு இடையிலான இடைத்தரகர்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- சூலூர் அல்லது சுல்தான்பேட்டையில் அரசு கலை கல்லூரி மற்றும் ஐ.டி.ஐ. அமைக்க மக்கள் நீதி மய்யம் நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும்.
- மக்கள் பயன்படும் வகையில் சூலூர், இருகூர் மற்றும் சோமனூர் ரயில்நிறுத்தங்கள் தரம் உயர்த்தப்படும்.