நீலகிரியில் பரவலான பகுதிகளில் தொடரும் கோடை மழை : வார விடுமுறைகளிலும் நீட்டிக்கும் மழையால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

நீலகிரி : நீலகிரியில் பெய்து வரும் மழை, வார இறுதி நாட்களிலும் நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.


நீலகிரி : நீலகிரியில் பெய்து வரும் மழை, வார இறுதி நாட்களிலும் நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.



நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் குன்னூரில் கடந்த சில நாட்களாக மதிய வேளைகளில் பரவலாக மழைப் பெய்து வந்தது. இதனை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்தனர். இந்நிலையில், உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. விட்டு விட்டு பெய்து வரும் இந்த மழையால் மழை நீர் சாலைகளில் கரை புரண்டு ஒடுகிறது. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பலர் தங்கும் விடுதிகளிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்து காணப்படும் நிலையில், குறிப்பிட்ட சுற்றுலாத் தலத்தை குறித்த நேரத்தில் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த குளு குளு காலநிலையினை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக அனுபவித்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...