குன்னூர் அருகே குட்டியை முதுகில் போட்டுக் கொண்டு உலா வரும் தாய் கரடி : பொதுமக்கள் அச்சம்

நீலகிரி : குன்னூர் அருகே உள்ள அளக்கரை பகுதியில் குட்டியை முதுகில் போட்டுக் கொண்டு உலா வரும் கரடியால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி : குன்னூர் அருகே உள்ள அளக்கரை பகுதியில் குட்டியை முதுகில் போட்டுக் கொண்டு உலா வரும் கரடியால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அளக்கரை கிராமப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்களில், பெரும்பாலானவர்கள் தேயிலை தோட்டங்களில் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக கரடிகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இதன் காரணமாக, பணிக்கு சென்று விட்டு மாலை மற்றும் இரவு நேரங்களில் வீடு திரும்பும் தொழிலாளர்களும், வாகனங்களில் செல்வோரும் அச்சத்துடன் சென்று வந்தனர்.



இந்த நிலையில், இன்று இப்பகுதியில் கரடி ஒன்று தன்னுடைய குட்டியை முதுகில் சுமந்தவாறு தேயிலை தோட்டங்களில் சுற்றி வருகிறது. இதனைக் கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும், குட்டியை சுமந்து வருவதால், அந்தக் கரடி மிகவும் ஆக்ரோஷத்துடன் இருந்தது. பின்னர், இந்த கரடி அருகில் இருந்து புதருக்குள் சென்று மறைந்தது. இதனால், எந்த நேரத்தில் கரடி குடியிருப்பு பகுதிகளை நோக்கி வரலாம் என்பதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். 

மேலும், உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் அடிக்கடி கிராமப் பகுதியில் உலா வரும் இந்தக் கரடிகளை கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...