தொடர் மழையினால் நீலகிரி மாவட்டத்தில் விடுதியிலேயே முடங்கிக் கிடக்கும் சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சுற்றுலாவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் விடுதிகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சுற்றுலாவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் விடுதிகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலுடன் கூடிய இதமான காலநிலை நிலவியது. இதனால், தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால், இந்த கால நிலையை நாள்தோறும் வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்தனர். இந்த நிலையில், கடந்த 3 நாட்களாகப் பிற்பகலில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.



குன்னூர், கோத்தகிரியில் சாரல் மழையும், உதகையில் சீரான இடைவெளியில் பலத்த மழையும் பெய்து வருகிறது. இந்த மழையால் மழைநீர் சாலைகளில் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், பலர் தங்கும் விடுதிகளிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டது. இந்த மழை அணைப் பகுதிகளிலும் பெய்துள்ளதால், கோடையில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவு சமாளிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...