நீலகிரி : உதகை தேனிலவு படகு இல்லம் பகுதியில் கட்டிடக் கழிவுகள் மற்றும் வீணான உடைந்த படகின் பாகங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் பொலிவிழந்து காணப்படுவதாக சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நீலகிரி : உதகை தேனிலவு படகு இல்லம் பகுதியில் கட்டிடக் கழிவுகள் மற்றும் வீணான உடைந்த படகின் பாகங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் பொலிவிழந்து காணப்படுவதாக சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உதகைக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உதகை ஏரியின் மறு கரையில் புதிதாக தேனிலவு படகு இல்லம் அமைக்கப்பட்டது. ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட படகு இல்லம் மற்றும் நடைபாதை சில ஆண்டுகளில் பொலிவில்லாமல் காணப்பட்டது. நடைபாதையையொட்டி, வனப்பகுதி இருப்பதால், காலை நேரத்தில் நடை பயிற்சி செல்லும் பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், தேனிலவு படகு இல்லம் சீரமைப்பு பணிக்காக 48 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்மூலம், புதிய படகு இல்லத்தின் நடைபாதைகள், கூரைகள் மற்றும் படகு நிறுத்தும் தளம் ஆகியவை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவை தரமில்லாமல் இருப்பதாலும், புதர்கள் மண்டி கிடப்பதாலும், சுற்றுலாப் பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கட்டிடக் கழிவுகள் மற்றும் வீணான உடைந்த படகின் பாகங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் தேனிலவு படகு இல்லம் பொலிவை இழந்துள்ளது. எனவே, தேனிலவு படகு இல்லத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உதகைக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உதகை ஏரியின் மறு கரையில் புதிதாக தேனிலவு படகு இல்லம் அமைக்கப்பட்டது. ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட படகு இல்லம் மற்றும் நடைபாதை சில ஆண்டுகளில் பொலிவில்லாமல் காணப்பட்டது. நடைபாதையையொட்டி, வனப்பகுதி இருப்பதால், காலை நேரத்தில் நடை பயிற்சி செல்லும் பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், தேனிலவு படகு இல்லம் சீரமைப்பு பணிக்காக 48 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்மூலம், புதிய படகு இல்லத்தின் நடைபாதைகள், கூரைகள் மற்றும் படகு நிறுத்தும் தளம் ஆகியவை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவை தரமில்லாமல் இருப்பதாலும், புதர்கள் மண்டி கிடப்பதாலும், சுற்றுலாப் பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கட்டிடக் கழிவுகள் மற்றும் வீணான உடைந்த படகின் பாகங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் தேனிலவு படகு இல்லம் பொலிவை இழந்துள்ளது. எனவே, தேனிலவு படகு இல்லத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.