கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 58 ஆயிரம் எல்.இ.டி. தெரு விளக்குக்கள் பொருத்தும் பணி இந்த மாதம் தொடக்கம்

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பழுதடைந்த தெருவிளக்குகளை மாற்றுவற்காக வாங்கப்பட்ட 58 ஆயிரம் எல்.இ.டி. தெரு விளக்குக்கள் பொருத்தும் பணி இந்த மாதத்தில் தொடங்குகிறது.

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பழுதடைந்த தெருவிளக்குகளை மாற்றுவற்காக வாங்கப்பட்ட 58 ஆயிரம் எல்.இ.டி. தெரு விளக்குக்கள் பொருத்தும் பணி இந்த மாதத்தில் தொடங்குகிறது.



கடந்த 2011-ம் ஆண்டு இருந்த 60 வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டதில் 100 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டது. இந்த வார்டுகளில் தெருவிளக்குகள் பராமரிக்கும் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முறையான பராமரிப்பின்மை மற்றும் சரியாக செயல்படவில்லை என பொதுமக்கள் அடுத்தடுத்து புகார்களை தெரிவித்து வந்தனர். இதையடுத்து, புதிதாக சேர்க்கப்பட்ட 40 வார்டுகளில் ஒப்பந்ததாரர்களின் மூலம் தெருவிளக்குகள் மாற்றப்பட்டு விட்டன. 

தற்போது, பழைய 60 வார்டுகளில் இருக்கும் தெரு விளக்குகளை மாற்றும் பணி தனியாரிடம் வழங்கியும் நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில், வரும் மே 24-ம் தேதி முதல் மாநகராட்சிக்குட்பட்ட பழைய வார்டுகளில் தெரு விளக்குகளை மாற்றும் பணி தொடங்குகிறது. இத்ஜற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.74 கோடி மதிப்பில் 58,000 தெருவிளக்குகள் வாங்கப்பட்டுள்ளன. மேலும், 6 மாதங்களுக்குள் இந்தப் பணிகளை முடித்து கொடுக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு கோவை மாநகராட்சி கெடு விதித்துள்ளது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...