உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி : அரசாணை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

சென்னை : தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்வது, வாக்குச் சாவடிகள் அமைப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை : தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்வது, வாக்குச் சாவடிகள் அமைப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழக தேர்தல் ஆணையத்தின் சார்பில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது :- வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான மாதிரி படிவம் அளிக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி அடிப்படையில் வாக்குச்சாவடி வகைகள் பிரிக்கப்பட்டுள்ளன.அதன் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் 2019 படிவமும் வெளியிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் இறுதி செய்வதற்கு 3 மாதம் கால அவகாசம் வேண்டுமென்றும், தற்போதைய சூழலில் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதிக்கட்ட பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...