கோவை : சூலூர் இடைத்தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜி. மயில்சாமியை ஆதரித்து கமல்ஹாசன் இன்று முதல் 2 நாள் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
கோவை : சூலூர் இடைத்தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜி. மயில்சாமியை ஆதரித்து கமல்ஹாசன் இன்று முதல் 2 நாள் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
சூலூர் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜி. மயில்சாமி போட்டியிடுகிறார். இந்த நிலையில், அவரை ஆதரித்து கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சூலூரின் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிக்க உள்ளார். இன்று மாலை 4.30 மணிக்கு ஜோலார்பேட்டையில் பிரச்சாரத்தை தொடங்கும் கமல்ஹாசன், செஞ்சேரி மலை, சுல்தான்பேட்டை, சந்திராபுரம், பாப்பம்பட்டி பிரிவு மற்றும் சூலூரில் பிரச்சாரம் செய்கிறார்.
தொடர்ந்து, நாளை சின்னியம்பாளையம், தென்னம்பாளையம், சூலூர் பிரிவு, கருமத்தம்பட்டி, சோமனூர் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மேலும், இருகூரில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
சூலூர் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜி. மயில்சாமி போட்டியிடுகிறார். இந்த நிலையில், அவரை ஆதரித்து கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சூலூரின் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிக்க உள்ளார். இன்று மாலை 4.30 மணிக்கு ஜோலார்பேட்டையில் பிரச்சாரத்தை தொடங்கும் கமல்ஹாசன், செஞ்சேரி மலை, சுல்தான்பேட்டை, சந்திராபுரம், பாப்பம்பட்டி பிரிவு மற்றும் சூலூரில் பிரச்சாரம் செய்கிறார்.
தொடர்ந்து, நாளை சின்னியம்பாளையம், தென்னம்பாளையம், சூலூர் பிரிவு, கருமத்தம்பட்டி, சோமனூர் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மேலும், இருகூரில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.