33 நகரங்களுடன் ஸ்மார்ட் சிட்டி விருதுக்கான முதல் சுற்றை நிறைவு செய்த கோவை மாநகராட்சி

கோவை : இந்திய ஸ்மார்ட் சிட்டி விருது போட்டிக்கான முதல் சுற்றை கோவை உள்பட 33 நகரங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்தன.

கோவை : இந்திய ஸ்மார்ட் சிட்டி விருது போட்டிக்கான முதல் சுற்றை கோவை உள்பட 33 நகரங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்தன.

வீட்டமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் சார்பில் ஸ்மார்ட் சிட்டி விருதுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், முன்னோடி நகர உத்திகள், திட்டங்கள் மற்றும் யோசனைகள் ஆகியவற்றில் புதுமை, தாக்கம் மற்றும் துல்லியம் ஆகியவற்றை புகுத்துவதன் அடிப்படையில் விருது வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட விருதுக்கான போட்டியில் பங்கேற்றுள்ள நகரங்களில் கோவை உள்பட 33 நகரங்கள் முதல் சுற்றை நிறைவு செய்துள்ளன. அதாவது, முதல் சுற்று என்பது ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டுக்கான திட்டங்கள் அடங்கிய அறிக்கையை சமர்பிப்பதாகும். வரும் மே 15-ம் தேதி இதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் கோவை, சென்னை மட்டுமே இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளன. புதுமையான விருது, நகர விருது மற்றும் திட்ட விருது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட் சிட்டி நகரங்களுக்கு மட்டுமே இந்த விருது கொடுக்கப்படுகிறது.

“திட்ட அறிக்கை தொடர்பான விண்ணப்பத்தை சமர்பிப்பது மிகவும் கடினமானதாகும். விண்ணப்பத்துடன், பல்வேறு ஆவணங்கள் இணைத்து வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் முதல் சுற்றை நிறைவு செய்து விட்டோம். ஒதுக்கப்பட்டுள்ள 1,108 கோடியில் திட்டங்களை செயல்படுத்த 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே, இந்த விருதை பெறுவோம் என்பதை உறுதியாக கூற முடியாது. ஆனால், எங்களால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம்,” என கோவை மாநகராட்சி மூத்த அதிகாரி தெரிவித்தார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...