தி.மு.க. முன்னாள் எம்.பி. எம்.ராமநாதன் காலமானார் : அஞ்சலி செலுத்துவதற்காக ஸ்டாலின் இன்று கோவை வருகை

கோவை : வயது முதிர்வின் காரணமாக தி.மு.க. முன்னாள் எம்.பி. எம். ராமநாதன் இன்று காலமானார். அவரது உடலுக்கு அஞசலி செலுத்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று கோவை வருகிறார்.


கோவை : வயது முதிர்வின் காரணமாக தி.மு.க. முன்னாள் எம்.பி. எம். ராமநாதன் இன்று காலமானார். அவரது உடலுக்கு அஞசலி செலுத்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று கோவை வருகிறார்.

ஏற்கனவே நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்த அவர், வயோதிகம் காரணமாக தனது 84-வது வயதில் இன்று காலை கோவை செட்டி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். மறைந்த எம். ராமநாதனின் உடலுக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, முன்னாள் எம்.பி. ராமநாதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று காலை 11.30 மணியளவில் கோவை வருகிறார். அவருடன் கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்களும் வர இருப்பதாகக் கூறப்படுகிறது.

84 வயதான முன்னாள் எம்.பி. ராமநாதன், 1959-ம் ஆண்டு முதல் கோவை மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். குறிப்பாக, 1992-96 வரை கோவை மாவட்ட தி.மு.க. தலைவராகவும் இருந்துள்ளார். 1984 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் கோவை மேற்கு தொகுதியில் இருந்து இரு முறை எம்.எல்.ஏ.வாக தேர்வானார்.1996-ம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

கட்சியில் மாநகர, மாவட்ட பொறுப்புகள் வகித்த அவர், பின்னர் சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர், உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார். இவரது மனைவி பெயர் ராமகாந்தம். இவருடைய 5 மகன்களில் இருவர் உயிரிழந்து விட்ட நிலையில், மூவர் மட்டும் இராமநாதனுடன் உடன் இருக்கின்றனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...