கோவை : மேட்டுப்பாளையம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயக் கூலி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : மேட்டுப்பாளையம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயக் கூலி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வேடர்காலனி பகுதியில் பவானி ஆற்று நீர் பாசனம் மூலம் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவர் சின்னதம்பி. இவர், இன்று மதியம் வாழை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக பவானி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள பம்பு செட் பகுதிக்கு சென்று, மின் சுவிட்சை போட முயற்சித்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக, மின்சாரம் பாய்ந்து சின்னதம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த வழியே வந்த அப்பகுதி மக்கள், உயிரற்ற நிலையில் மின்சார பெட்டி அருகே இருந்த சின்னதம்பியை பார்த்து மேட்டுப்பாளையம் காவல்துறைக்கும் மின்சார வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மின்சார வாரிய ஊழியர்கள் உதவியுடன் சின்னதம்பியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வேடர்காலனி பகுதியில் பவானி ஆற்று நீர் பாசனம் மூலம் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவர் சின்னதம்பி. இவர், இன்று மதியம் வாழை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக பவானி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள பம்பு செட் பகுதிக்கு சென்று, மின் சுவிட்சை போட முயற்சித்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக, மின்சாரம் பாய்ந்து சின்னதம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த வழியே வந்த அப்பகுதி மக்கள், உயிரற்ற நிலையில் மின்சார பெட்டி அருகே இருந்த சின்னதம்பியை பார்த்து மேட்டுப்பாளையம் காவல்துறைக்கும் மின்சார வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மின்சார வாரிய ஊழியர்கள் உதவியுடன் சின்னதம்பியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.