கோவை : சூலூர் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கக் கோரி, நாடாளுமன்ற பிரச்சாரத்தின் போது மர்மமான முறையில் உயிரிழந்த மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் பாலமுருகனின் மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
கோவை : சூலூர் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கக் கோரி, நாடாளுமன்ற பிரச்சாரத்தின் போது மர்மமான முறையில் உயிரிழந்த மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் பாலமுருகனின் மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்லடம் பகுதியைச் சேர்ந்த மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் பாலமுருகன் என்பவரின் மனைவி விஜயகுமாரி மனு அளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-, மக்கள் நீதி மையத்தில் உறுப்பினராகவும், நாடாளுமன்ற தேர்தலில் பல்லடம் பகுதி பூத் கமிட்டி உறுப்பினராகவும் இருந்த எனது கணவர் பாலமுருகன், கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி பல்லடம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சென்றவர் சடலமாக மீட்கப்பட்டார். இவரது இறப்பு குறித்து கூட அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் சிவக்குமார், செந்தில் ஆகியோர் எனக்கு தெரிவிக்கவில்லை. அதேபோல், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மகேந்திரனும் இறப்பு குறித்து கேட்கவில்லை. நேரில் வந்து கூட ஆறுதல் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், மர்மமான முறையில் இறந்த கணவரின் இழப்பிற்கு மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமலஹாசன் ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத நிலையில், சூலூரில் கமல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும். தொண்டர்களையே கண்டுகொள்ளாத கமல் மக்களின் பிரச்சனைகளை எப்படி போக்குவார்..? நாங்கள் அருந்ததியர் சமூகம் என்ற காரணமா..? அல்லது என் சமூக மக்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் நோக்கமா..?என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்லடம் பகுதியைச் சேர்ந்த மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் பாலமுருகன் என்பவரின் மனைவி விஜயகுமாரி மனு அளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-, மக்கள் நீதி மையத்தில் உறுப்பினராகவும், நாடாளுமன்ற தேர்தலில் பல்லடம் பகுதி பூத் கமிட்டி உறுப்பினராகவும் இருந்த எனது கணவர் பாலமுருகன், கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி பல்லடம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சென்றவர் சடலமாக மீட்கப்பட்டார். இவரது இறப்பு குறித்து கூட அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் சிவக்குமார், செந்தில் ஆகியோர் எனக்கு தெரிவிக்கவில்லை. அதேபோல், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மகேந்திரனும் இறப்பு குறித்து கேட்கவில்லை. நேரில் வந்து கூட ஆறுதல் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், மர்மமான முறையில் இறந்த கணவரின் இழப்பிற்கு மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமலஹாசன் ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத நிலையில், சூலூரில் கமல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும். தொண்டர்களையே கண்டுகொள்ளாத கமல் மக்களின் பிரச்சனைகளை எப்படி போக்குவார்..? நாங்கள் அருந்ததியர் சமூகம் என்ற காரணமா..? அல்லது என் சமூக மக்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் நோக்கமா..?என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.