தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 175 சதவீதம் அதிகரிப்பு

கோவை : தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்ச்சி 175% அதிகரித்து உள்ளதாக வன்புணர்ச்சி இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கோவை : தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்ச்சி 175% அதிகரித்து உள்ளதாக வன்புணர்ச்சி இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.



கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வன்புணர்ச்சி இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் அமைப்பினர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, அந்த அமைப்பின் குழந்தைகள் உரிமை ஆர்வலர் மருத்துவர் உமாசங்கர் கூறியதாவது:- தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்ச்சி 175% அதிகரித்து உள்ளது. இது தேசிய அளவில் மூன்று சதவிகிதம். தமிழகம் நாட்டின் 15-வது இடத்தில் இருக்கிறது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க, கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அமைப்பு வரும் 2022ம் ஆண்டுக்குள் வன்புணர்ச்சி இல்லாத இந்தியாவாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. 

முதற்கட்ட முயற்சியாக, நாடு முழுவதும் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தனியார் அமைப்புகளுடன் இணைந்து மாற்றத்திற்கான முயற்சியாக 292 வேட்பாளர்களிடம் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து வாங்கி உள்ளது. தமிழகத்தில் 27 பேர் கையெழுத்திட்டுள்ளனர். இதில், முக்கிய அரசியல் தலைவர்கள் ஷீலா தீட்சித், திக்விஜய் சிங், சரத்யாதவ், ரவிசங்கர் பிரசாத், தமிழகத்தில் இ.வி.கே.எஸ் இளங்கோவன், வெங்கடேசன், பி.ஆர்.நடராஜன், தனுஷ்குமார் உள்ளிட்டோர் வரும் காலங்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்கு துனை நிற்போம் என உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு உள்ளனர்.

மேலும், வரும் ஆண்டுகளில் மத்திய பட்ஜெட்டில் பத்து சதவீத நிதியை குழந்தைகள் பாதுகாப்பிற்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இருக்கிறோம். 20 மாநிலங்களில் இந்த அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இந்த அமைப்பு செயல்பட துவங்கி உள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், வரும் ஆண்டில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு பாலியல் வன்புணர்வு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யபட்டு வருகிறது. இதன் மூலம், மாணவர்கள் பலனடைவார்கள் என நம்புகிறேன், எனக் கூறினார்.

இந்த சந்திப்பின் போது மாநில அமைப்பாளர் ராஜகோபால், அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில குழு உறுப்பினர் ராஜலட்சுமி, கோவை மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் ரெஜினா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...