கோவையில் ஞாயிற்று கிழமை காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியதொழிற்சங்க மையம் (சிஐடியு), இந்திய ஜனநாயகவாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகள் இணைந்து ஞாயிறன்று மதவெறியை மாய்ப்போம், மக்கள் ஒற்றுமை காப்போம் என்கிற உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி மற்றும் மனித சங்கிலி இயக்கத்தை கோவையில் நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில், சிஐடியு மாநில செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான அ.சவுந்திரராசன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.