கோடை சீசனையொட்டி உதகையில் மீன் அருங்காட்சியகம் திறப்பு

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மீன் அருங்காட்சியகம் தனியார் நிறுவனம் சார்பில் திறக்கப்பட்டுள்ளது.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மீன் அருங்காட்சியகம் தனியார் நிறுவனம் சார்பில் திறக்கப்பட்டுள்ளது.



கோடை சீசனை அனுபவிக்க நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக, மாவட்டத்திலேயே முதன் முறையாக உதகையிலிருந்து தொட்டபெட்டா செல்லும் சாலையில் மீன் அருங்காட்சியகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில், 500 வகையிலான வண்ண மீன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. புளோரா, ஜெயின்ட் கெளரா, பப்பிள்ஸ் மற்றும் காஷ்பர் உள்ளிட்ட சர்வதேச அளவிலான மீன்களும் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.



குறிப்பாக, ஜெயின்ட் கெளரா மீன் 35 வருடங்கள் வரை உயிர் வாழும் தன்மை கொண்டது. இந்த வகை மீன்கள் மனிதர்களிடம் நல்ல முறையில் பழகுவதோடு மட்டுமல்லாமல், பச்சை காய்கறிகளை மட்டுமே உணவாக உட்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, புளோரா வகை மீன்களும் மனிதர்களிடம் சகஜமாக பழக கூடியதாகும். இந்த மீன் அருங்காட்சியகமானது சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...