நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மீன் அருங்காட்சியகம் தனியார் நிறுவனம் சார்பில் திறக்கப்பட்டுள்ளது.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மீன் அருங்காட்சியகம் தனியார் நிறுவனம் சார்பில் திறக்கப்பட்டுள்ளது.

கோடை சீசனை அனுபவிக்க நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக, மாவட்டத்திலேயே முதன் முறையாக உதகையிலிருந்து தொட்டபெட்டா செல்லும் சாலையில் மீன் அருங்காட்சியகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில், 500 வகையிலான வண்ண மீன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. புளோரா, ஜெயின்ட் கெளரா, பப்பிள்ஸ் மற்றும் காஷ்பர் உள்ளிட்ட சர்வதேச அளவிலான மீன்களும் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக, ஜெயின்ட் கெளரா மீன் 35 வருடங்கள் வரை உயிர் வாழும் தன்மை கொண்டது. இந்த வகை மீன்கள் மனிதர்களிடம் நல்ல முறையில் பழகுவதோடு மட்டுமல்லாமல், பச்சை காய்கறிகளை மட்டுமே உணவாக உட்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, புளோரா வகை மீன்களும் மனிதர்களிடம் சகஜமாக பழக கூடியதாகும். இந்த மீன் அருங்காட்சியகமானது சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோடை சீசனை அனுபவிக்க நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக, மாவட்டத்திலேயே முதன் முறையாக உதகையிலிருந்து தொட்டபெட்டா செல்லும் சாலையில் மீன் அருங்காட்சியகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில், 500 வகையிலான வண்ண மீன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. புளோரா, ஜெயின்ட் கெளரா, பப்பிள்ஸ் மற்றும் காஷ்பர் உள்ளிட்ட சர்வதேச அளவிலான மீன்களும் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக, ஜெயின்ட் கெளரா மீன் 35 வருடங்கள் வரை உயிர் வாழும் தன்மை கொண்டது. இந்த வகை மீன்கள் மனிதர்களிடம் நல்ல முறையில் பழகுவதோடு மட்டுமல்லாமல், பச்சை காய்கறிகளை மட்டுமே உணவாக உட்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, புளோரா வகை மீன்களும் மனிதர்களிடம் சகஜமாக பழக கூடியதாகும். இந்த மீன் அருங்காட்சியகமானது சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.