நீலகிரியில் மத்திய அரசைக் கண்டித்து விரைவில் போராட்டம் : இயக்குநர் கவுதம் அறிவிப்பு

நீலகிரி : அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையின் உற்பத்தியை குறைத்து தனியாருக்கு தாரைவார்த்தல் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு மக்கள் விரோத போக்கு நடவடிக்கைகளை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையின் உற்பத்தியை குறைத்து தனியாருக்கு தாரைவார்த்தல் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு மக்கள் விரோத போக்கு நடவடிக்கைகளை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திரைப்பட இயக்குனரும் தமிழ் பேரரசு கட்சித் தலைவருமான வ. கவுதமன் கூறியதாவது :- நீலகிரி மாவட்டத்தின் பூர்வகுடிகளான இருளர், தோடர், குறும்பர் உள்ளிட்ட பழங்குடியின மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்றும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 



குன்னூர் அருவங்காடு பகுதியில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலை உற்பத்தியை குறைத்து தனியாருக்கு உற்பத்தியை தாரைவார்த்து தரும் மத்திய அரசின் தவறான கொள்கை கண்டிக்கத்தக்கது.



நீலகிரி மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்பினை அதிகரிக்க வலியுறுத்தியும், இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை நவீன மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்பதை நிறைவேற்றக் கோரியும் விரைவில் போராட்டம் நடத்தப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...