கோவை : கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் மாநகராட்சி பள்ளிகளில் கல்வித்திறன் மேம்பாட்டுப் பணிகள் குறித்து அலுவலர்கள் மற்றும் மாநகராட்சியின் 11 உயர்நிலைப்பள்ளிகள், 16 மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கோவை : கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் மாநகராட்சி பள்ளிகளில் கல்வித்திறன் மேம்பாட்டுப் பணிகள் குறித்து அலுவலர்கள் மற்றும் மாநகராட்சியின் 11 உயர்நிலைப்பள்ளிகள், 16 மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநகராட்சிப் பள்ளிகளில் 2019 கல்வியாண்டில் 12-ம் வகுப்பில் 16 பள்ளிகளைச் சேர்ந்த 1,831 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதியதில் 1,692 பேர் தேர்ச்சி பெற்று 92.41 சதவீதம் பெற்றுள்ளனர். மேலும், 10-ம் வகுப்பிற்கு நடைபெற்ற பொதுத் தேர்வில் மாநகராட்சியைச் சேர்ந்த மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி வரதராஜபுரம், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உடையாம்பாளையம், மாநகராட்சி எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மணியகாரம்பாளையம், மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி புலியகுளம் ஆகிய ஐந்து பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் பேசியதாவது :- மாநகராட்சி பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாணவ, மாணவியர்களின் 100 சதவீத தேர்ச்சிக்காகவும், சென்ற ஆண்டைவிட தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளதற்காகவும், மாநகராட்சி பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களையும், மாணவர்களையும் பாராட்டுகிறேன். வரும் கல்வியாண்டில் மாநகராட்சியைச் சேர்ந்த அனைத்து பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் அளவிற்கு அனைத்து ஆசிரியர்களும் பணியாற்ற வேண்டும்.
மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேலும் மேம்படுத்திடவும், மாநகராட்சி பள்ளிகளின் மாணவர்களின் விளையாட்டு திறமைகளையும் மற்றும் தனித்திறமைகளையும் ஊக்கப்படுத்தி கல்வியில் சிறந்து விளங்கிட சம்மந்தப்பட்ட அனைவரும் பணியாற்றிட வேண்டும், என அவர் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, மாநகராட்சி கல்வி அலுவலர் (பொறுப்பு) ஆர். ரவி மற்றும் மாநகராட்சி பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநகராட்சிப் பள்ளிகளில் 2019 கல்வியாண்டில் 12-ம் வகுப்பில் 16 பள்ளிகளைச் சேர்ந்த 1,831 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதியதில் 1,692 பேர் தேர்ச்சி பெற்று 92.41 சதவீதம் பெற்றுள்ளனர். மேலும், 10-ம் வகுப்பிற்கு நடைபெற்ற பொதுத் தேர்வில் மாநகராட்சியைச் சேர்ந்த மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி வரதராஜபுரம், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உடையாம்பாளையம், மாநகராட்சி எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மணியகாரம்பாளையம், மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி புலியகுளம் ஆகிய ஐந்து பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் பேசியதாவது :- மாநகராட்சி பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாணவ, மாணவியர்களின் 100 சதவீத தேர்ச்சிக்காகவும், சென்ற ஆண்டைவிட தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளதற்காகவும், மாநகராட்சி பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களையும், மாணவர்களையும் பாராட்டுகிறேன். வரும் கல்வியாண்டில் மாநகராட்சியைச் சேர்ந்த அனைத்து பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் அளவிற்கு அனைத்து ஆசிரியர்களும் பணியாற்ற வேண்டும்.
மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேலும் மேம்படுத்திடவும், மாநகராட்சி பள்ளிகளின் மாணவர்களின் விளையாட்டு திறமைகளையும் மற்றும் தனித்திறமைகளையும் ஊக்கப்படுத்தி கல்வியில் சிறந்து விளங்கிட சம்மந்தப்பட்ட அனைவரும் பணியாற்றிட வேண்டும், என அவர் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, மாநகராட்சி கல்வி அலுவலர் (பொறுப்பு) ஆர். ரவி மற்றும் மாநகராட்சி பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.