ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தகவல்: மேலும் சில நாட்கள் மருத்துவமனையில்

உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா, மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என அந்த மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 22ஆம் தேதியன்று இரவு உடல் நலக் குறைவின் காரணமாக முதலமைச்சர் ஜெயலலிதா க்ரீம்ஸ் சாலையில் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவின் காரணமாக அவர் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை கூறியது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இதற்கு முன்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பிலும் முதல்வர் நலம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதற்குப் பிறகு முதல்வரின் உடல்நலம் குறித்து செய்திகள் ஏதும் வெளியாகாத நிலையில், மாநிலம் முழுவதும் வதந்திகள் பரவின.

இந்த நிலையில் வியாழக்கிழமையன்று இரவில் அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல்வரின் உடல்நலம், நன்றாகத் தேறிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டிருப்பதாகவும் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த செய்திக் குறிப்பு கூறுகிறது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...