அதிமுக வேட்பாளர்களை மாற்ற கோரி அதிமுக தொண்டர்கள் மூன்றாவது நாளாக போராட்டம்.

கோவை மாநகராட்சி 84வது வார்டு வேட்பாளராக அதிமுகவை சேர்ந்த கணபதி சுப்பிரமணியம் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய கவுன்சிலரான அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிமுக மாநகராட்சி 84 வது வேட்பாளரை மாற்ற கோரி ஏராளமான அதிமுகவினர் இன்று கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கணபதி சுப்பிரமணியம் ஏற்கனவே கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருபவர் எனவும், தமிழக முதல்வர் பேனரை கிழித்தவர் எனவும் குற்றம்சாட்டிய அவர்கள், கணபதி சுப்பிரமணியம் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாகவும் அதிமுகவினர் குற்றம்சாட்டினர்.

எனவே 84வது வார்டு வேட்பாளரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும வலியுறுத்திய அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர். ஏற்கனவே இராமநாதபுரம் பகுதியில் 68வது வார்டு, 70வது வார்டு, 71 வார்டு ,73வது வார்டு, 75 வதுவார்டு ஆகியவார்டுகளில் அறிவித்துள்ள வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த இரு தினங்களாகஅதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் 84வது வார்டு அதிமுக வேட்பாளரையும் மாற்றவேண்டும் என கோரி அதிமுகவினர் அதிமுக அலுவலகத்தை மூன்றாவது நாளாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...