கோவையில் அகில இந்திய ஜீரண மண்டல அறுவை சிகிச்சை நிபுணர்களின் மருத்துவ மாநாடு

கோவை மாநகரில், அகில இந்திய ஜீரண மண்டல அறுவை சிகிச்சை நிபுணர்களின் மருத்துவ மாநாடு ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறும் மாநாட்டில் 25ம் ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு, கோவை ஜெம் மருத்துவமனை அக்டோபர் 6ம் தேதி  முதல் 9ம் வரை கொடிசியா வளாகத்தில் நடத்தப்படவுள்ளது. கோவையில் இம்மாநாடு நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். இம்மாநாட்டில் 1500க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சர்வதேச அறுவை சிகிச்சை மருத்துவர்கள்  பங்கேற்கவுள்ளனர். 




இம்மாநாட்டில், அக்டோபர் 6ம் தேதி முதல் நாளன்று, அறுவை சிகிச்சை ஒளிபரப்பு செய்து காண்பிக்கப்பட்ட  உள்ளது. இதில், உணவுக்குழாய், இறப்பை, பெருங்குடல், மலக்குடல், கணையம், கல்லீரல் ஆகியவற்றின் வரும் புற்றுநோய்களை லேப்பிரோஸ்கோப்பிக்  மற்றும் வழக்கமான அறுவை சிகிச்சை மூலமாக செய்து காண்பிக்க உள்ளனர். இந்த ஒளிபரப்பினை 4K மற்றும் 3D மூலம்  ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. 4K ஒளிபரப்பானது ஜீரண மண்டல உறுப்புகளை  மிக துல்லியமாக  காட்டக்கூடியது. மற்றும் அறுவை சிகிச்சைக்கு எளிதாக பயன்படக்கூடியது. இந்தியாவில் முதல்முறையாக அறுவை சிகிச்சை மற்றும் நேரடி ஒளிபரப்பு இம்மாநாட்டில் காண்பிக்கப்பட்ட உள்ளது. 


அக்டோபர் 7ம் தேதி இரண்டாம் நாளாக, தொடர்ச்சியான மருத்துவ கல்வி (CME) என்ற தலைப்பில் சர்ச்சைகள், சிக்கல்கள் மற்றும் ஒருமித்த கருத்தாக நடைபெறவுள்ளது. இதன் அடிப்படையில் பல்வேறு ஜீரண மண்டல சிகிச்சைகள் பற்றிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. டாக்டர்.சி.பழனிவேலு தமையில் கணையம் பற்றிய லேப்பிரோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை முறையில் சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இதில் அமெரிக்கா, ஐரோப்பா, இத்தாலி, ஜெர்மன், கொரிய, ஜப்பான் மற்றும் பல் நாடுகளில் இருந்து 35 பேராசிரியர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர். 


அக்டோபர் 8ம் தேதி மூன்றாம் நாளன்று, உலக புகழ்பெற்ற சர்வதேச மற்றும் இந்திய ஜீரண மண்டல நிபுணர்களின் சிகிச்சை பற்றிய கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. லேப்பிரோஸ்கோப்பிக்  கல்லீரல் அறுவை சிகிச்சைக்கான இரண்டாவது ஆசியா பசிபிக் நிபுணர் குழுவின் மனசு நடைபெறவுள்ளது. இதில், சீனா, கொரிய, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் இந்திய நாட்டை சேர்ந்த கல்லீரல் அறுவை சிகிச்சை துறையில் சிறந்து விளங்கும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு நடப்பது இம்மாநாட்டில் முதல்முறையாகும். SSAT  முதல்முறையாக இம்மாநாட்டில் பங்கேற்கிறது. 


அக்டோபர் 9ம் தேதி இறுதி நாளன்று, நடக்கும் மாநாட்டில் இத்துறையின் பெரும் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த மருத்துவ பேராசிரியர்கள் தங்கள் மருத்துவ பயணத்தை எடுத்துரைக்கவுள்ளனர். இம்மாநாட்டியில் பயன்பெறும் வகையில் பல்வேறு செயல்முறை அறுவை சிகிச்சை கூடங்கள் அமைக்கப்படவுள்ளது. லேப்பிரோஸ்கோப்பிக் கணைய அறுவை சிகிக்சை பற்றி பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஜெம் மருத்துவமனையின் மருத்துவமனையின் முதன்மை மருத்துவரான டாக்டர்.சி.பழனிவேலு  மற்றும் மருத்துவகுழுக்கள் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...