கோவையில் அகில இந்திய ஜீரண மண்டல அறுவை சிகிச்சை நிபுணர்களின் மருத்துவ மாநாடு

கோவை மாநகரில், அகில இந்திய ஜீரண மண்டல அறுவை சிகிச்சை நிபுணர்களின் மருத்துவ மாநாடு ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறும் மாநாட்டில் 25ம் ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு, கோவை ஜெம் மருத்துவமனை அக்டோபர் 6ம் தேதி  முதல் 9ம் வரை கொடிசியா வளாகத்தில் நடத்தப்படவுள்ளது. கோவையில் இம்மாநாடு நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். இம்மாநாட்டில் 1500க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சர்வதேச அறுவை சிகிச்சை மருத்துவர்கள்  பங்கேற்கவுள்ளனர். 




இம்மாநாட்டில், அக்டோபர் 6ம் தேதி முதல் நாளன்று, அறுவை சிகிச்சை ஒளிபரப்பு செய்து காண்பிக்கப்பட்ட  உள்ளது. இதில், உணவுக்குழாய், இறப்பை, பெருங்குடல், மலக்குடல், கணையம், கல்லீரல் ஆகியவற்றின் வரும் புற்றுநோய்களை லேப்பிரோஸ்கோப்பிக்  மற்றும் வழக்கமான அறுவை சிகிச்சை மூலமாக செய்து காண்பிக்க உள்ளனர். இந்த ஒளிபரப்பினை 4K மற்றும் 3D மூலம்  ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. 4K ஒளிபரப்பானது ஜீரண மண்டல உறுப்புகளை  மிக துல்லியமாக  காட்டக்கூடியது. மற்றும் அறுவை சிகிச்சைக்கு எளிதாக பயன்படக்கூடியது. இந்தியாவில் முதல்முறையாக அறுவை சிகிச்சை மற்றும் நேரடி ஒளிபரப்பு இம்மாநாட்டில் காண்பிக்கப்பட்ட உள்ளது. 


அக்டோபர் 7ம் தேதி இரண்டாம் நாளாக, தொடர்ச்சியான மருத்துவ கல்வி (CME) என்ற தலைப்பில் சர்ச்சைகள், சிக்கல்கள் மற்றும் ஒருமித்த கருத்தாக நடைபெறவுள்ளது. இதன் அடிப்படையில் பல்வேறு ஜீரண மண்டல சிகிச்சைகள் பற்றிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. டாக்டர்.சி.பழனிவேலு தமையில் கணையம் பற்றிய லேப்பிரோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை முறையில் சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இதில் அமெரிக்கா, ஐரோப்பா, இத்தாலி, ஜெர்மன், கொரிய, ஜப்பான் மற்றும் பல் நாடுகளில் இருந்து 35 பேராசிரியர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர். 


அக்டோபர் 8ம் தேதி மூன்றாம் நாளன்று, உலக புகழ்பெற்ற சர்வதேச மற்றும் இந்திய ஜீரண மண்டல நிபுணர்களின் சிகிச்சை பற்றிய கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. லேப்பிரோஸ்கோப்பிக்  கல்லீரல் அறுவை சிகிச்சைக்கான இரண்டாவது ஆசியா பசிபிக் நிபுணர் குழுவின் மனசு நடைபெறவுள்ளது. இதில், சீனா, கொரிய, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் இந்திய நாட்டை சேர்ந்த கல்லீரல் அறுவை சிகிச்சை துறையில் சிறந்து விளங்கும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு நடப்பது இம்மாநாட்டில் முதல்முறையாகும். SSAT  முதல்முறையாக இம்மாநாட்டில் பங்கேற்கிறது. 


அக்டோபர் 9ம் தேதி இறுதி நாளன்று, நடக்கும் மாநாட்டில் இத்துறையின் பெரும் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த மருத்துவ பேராசிரியர்கள் தங்கள் மருத்துவ பயணத்தை எடுத்துரைக்கவுள்ளனர். இம்மாநாட்டியில் பயன்பெறும் வகையில் பல்வேறு செயல்முறை அறுவை சிகிச்சை கூடங்கள் அமைக்கப்படவுள்ளது. லேப்பிரோஸ்கோப்பிக் கணைய அறுவை சிகிக்சை பற்றி பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஜெம் மருத்துவமனையின் மருத்துவமனையின் முதன்மை மருத்துவரான டாக்டர்.சி.பழனிவேலு  மற்றும் மருத்துவகுழுக்கள் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...