கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் Pawan Kumar Giriyappanar தலைமையில் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பயிற்சி கூட்டம் இன்று நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்த விரிவான பயிற்சி வழங்கப்பட்டது.


Coimbatore: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 தொடர்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் இன்று (25.03.2025) ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்பவன் குமார் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர்சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது.



கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 115-மேட்டுப்பாளையம், 116-சூலூர், 117-கவுண்டம்பாளையம், 118-கோயம்புத்தூர் வடக்கு, 119-தொண்டாமுத்தூர், 120-கோயமுத்தூர் தெற்கு, 121-சிங்காநல்லூர், 122-கிணத்துக்கடவு, 123-பொள்ளாச்சி மற்றும் 124-வால்பாறை ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 366 எண்ணிக்கையிலான மண்டல அலுவலர்கள் மற்றும் 366 எண்ணிக்கையிலான உதவி மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.



இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவது தொடர்பாகவும், வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வதும் குறித்தும் மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கு விரிவான பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சி கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றிட வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.



இக்கூட்டத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் Ramakrishna Samy IAS, துணை ஆணையர் (கலால்) Dr. P Murugesan, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) Madhura, துணை ஆட்சியர் (பயிற்சி) Hari Priyanka, வட்டாட்சியர் (தேர்தல்) Thanikaivel மற்றும் மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...