கோவை : கடந்த 2016-ம் ஆண்டு பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை : கடந்த 2016-ம் ஆண்டு பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் ஆர்.ஜி.புதூர் பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் மேடை அலங்கார பணி செய்து வந்துள்ளார். இவரது நண்பர் கோபாலகிருஷ்ணன் ஆட்டோ ஓட்டுனராக இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு ஜுலை 2-ம் தேதி கார்த்திகேயன் மற்றும் கோபாலகிருஷ்ணன் இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் அவருடன் பணியாற்றிய கருப்புசாமி என்பவருக்கு கார்த்திகேயன் ஒரு லட்சம் ரூபாய் பண பாக்கி வைத்திருந்ததாகவும், அதை கொடுக்காத காரணத்தால் கொலையில் ஈடுபட்டதாக தெரியவந்தது.
இதனையடுத்து, கருப்பசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இந்த வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், கொலை குற்றம் சாட்டப்பட்ட கருப்பசாமிக்கு 3 ஆயுள் சிறைத்தண்டனை விதித்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டார். இரண்டு கொலைகளுக்கு இரு ஆயுள் தண்டனையும், அத்துமீறி நுழைந்ததற்கு ஒரு ஆயுள் தண்டனையும் என 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றவாளி கருப்பசாமியுடன் இந்த கொலை வழக்கில் கைதான வெற்றிசெல்வன், செல்வன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர்கள் இருவரும் விடுதலை செய்யபட்டனர்.