கோவையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இருவர் கொலை : குற்றவாளிக்கு 3 ஆயுள் தண்டனை விதிப்பு

கோவை : கடந்த 2016-ம் ஆண்டு பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


கோவை : கடந்த 2016-ம் ஆண்டு பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் ஆர்.ஜி.புதூர் பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் மேடை அலங்கார பணி செய்து வந்துள்ளார். இவரது நண்பர் கோபாலகிருஷ்ணன் ஆட்டோ ஓட்டுனராக இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு ஜுலை 2-ம் தேதி கார்த்திகேயன் மற்றும் கோபாலகிருஷ்ணன் இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் அவருடன் பணியாற்றிய கருப்புசாமி என்பவருக்கு கார்த்திகேயன் ஒரு லட்சம் ரூபாய் பண பாக்கி வைத்திருந்ததாகவும், அதை கொடுக்காத காரணத்தால் கொலையில் ஈடுபட்டதாக தெரியவந்தது. 

இதனையடுத்து, கருப்பசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இந்த வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், கொலை குற்றம் சாட்டப்பட்ட கருப்பசாமிக்கு 3 ஆயுள் சிறைத்தண்டனை விதித்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டார். இரண்டு கொலைகளுக்கு இரு ஆயுள் தண்டனையும், அத்துமீறி நுழைந்ததற்கு ஒரு ஆயுள் தண்டனையும் என 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றவாளி கருப்பசாமியுடன் இந்த கொலை வழக்கில் கைதான வெற்றிசெல்வன், செல்வன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர்கள் இருவரும் விடுதலை செய்யபட்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...