திருப்பூர் : வட மாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு புலம்பெயர்ந்தவர்கள் தங்களது குடும்பத்துடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
திருப்பூர் : வட மாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு புலம்பெயர்ந்தவர்கள் தங்களது குடும்பத்துடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தொழில் நகரமான திருப்பூரில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் குடும்பத்துடன் தங்கி பின்னலாடை தொழில் செய்து வருகின்றனர். வடமாநிலங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, திருப்பூரில் குடும்பத்துடன் தங்கியுள்ள வட மாநிலத்தவர்களும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர். அவிநாசி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை பூசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஹோலி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.

தொழில் நகரமான திருப்பூரில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் குடும்பத்துடன் தங்கி பின்னலாடை தொழில் செய்து வருகின்றனர். வடமாநிலங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, திருப்பூரில் குடும்பத்துடன் தங்கியுள்ள வட மாநிலத்தவர்களும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர். அவிநாசி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை பூசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஹோலி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.