கோவை : ராமநாதபுரம் பகுதியில் நஞ்சுண்டாபுரம் சாலையில் விழுந்த சுமார் 15 ஆண்டுகள் பழமையான மரத்தை, தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி அப்புறப்படுத்தினர்.
கோவை : ராமநாதபுரம் பகுதியில் நஞ்சுண்டாபுரம் சாலையில் விழுந்த சுமார் 15 ஆண்டுகள் பழமையான மரத்தை, தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி அப்புறப்படுத்தினர்.

கோவை நஞ்சுண்டாபுரம் சாலை அருகே உள்ள முருகன் நகர் பகுதியில் உள்ளது கன்னிகா பரமேஷ்வரி நகர். இந்தப் பகுதியில் சுமார் 15 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் உள்ளது. இந்த பழமையான மரம், நேற்று மாலை திடீரென சாய்ந்தது. அந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும் நடமாடாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. மேலும், மரம் விழுந்ததில் அருகே உள்ள மின் கம்பங்களில் இருந்த மின் வயர்கள் அறுந்து விழுந்தன. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மரத்தை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது உடன் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர், மரம் அறுக்கும் கட்டிங் இயந்திரங்கள் மூலம் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி சாலையில் கடந்த மரத்தை அப்புறப்படுத்தினர்.
மேலும், இந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, மின்சாரத்துறை, காவல்துறை, மாநகராட்சி மற்றும் ஓசை அமைப்பினர் ஆகியோர் இணைந்து செயல்பட்டனர்.

கோவை நஞ்சுண்டாபுரம் சாலை அருகே உள்ள முருகன் நகர் பகுதியில் உள்ளது கன்னிகா பரமேஷ்வரி நகர். இந்தப் பகுதியில் சுமார் 15 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் உள்ளது. இந்த பழமையான மரம், நேற்று மாலை திடீரென சாய்ந்தது. அந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும் நடமாடாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. மேலும், மரம் விழுந்ததில் அருகே உள்ள மின் கம்பங்களில் இருந்த மின் வயர்கள் அறுந்து விழுந்தன. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மரத்தை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது உடன் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர், மரம் அறுக்கும் கட்டிங் இயந்திரங்கள் மூலம் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி சாலையில் கடந்த மரத்தை அப்புறப்படுத்தினர்.
மேலும், இந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, மின்சாரத்துறை, காவல்துறை, மாநகராட்சி மற்றும் ஓசை அமைப்பினர் ஆகியோர் இணைந்து செயல்பட்டனர்.