15 ஆண்டுகள் பழமையான மரம் சாலையில் விழுந்து விபத்து : 2 மணி நேரம் போரடி அகற்றிய தீயணைப்புத் துறையினர்

கோவை : ராமநாதபுரம் பகுதியில் நஞ்சுண்டாபுரம் சாலையில் விழுந்த சுமார் 15 ஆண்டுகள் பழமையான மரத்தை, தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி அப்புறப்படுத்தினர்.

கோவை : ராமநாதபுரம் பகுதியில் நஞ்சுண்டாபுரம் சாலையில் விழுந்த சுமார் 15 ஆண்டுகள் பழமையான மரத்தை, தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி அப்புறப்படுத்தினர். 



கோவை நஞ்சுண்டாபுரம் சாலை அருகே உள்ள முருகன் நகர் பகுதியில் உள்ளது கன்னிகா பரமேஷ்வரி நகர். இந்தப் பகுதியில் சுமார் 15 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் உள்ளது. இந்த பழமையான மரம், நேற்று மாலை திடீரென சாய்ந்தது. அந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும் நடமாடாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. மேலும், மரம் விழுந்ததில் அருகே உள்ள மின் கம்பங்களில் இருந்த மின் வயர்கள் அறுந்து விழுந்தன. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மரத்தை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது உடன் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர், மரம் அறுக்கும் கட்டிங் இயந்திரங்கள் மூலம் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி சாலையில் கடந்த மரத்தை அப்புறப்படுத்தினர்.

மேலும், இந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, மின்சாரத்துறை, காவல்துறை, மாநகராட்சி மற்றும் ஓசை அமைப்பினர் ஆகியோர் இணைந்து செயல்பட்டனர்.

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...