திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் கேத்தம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் கேத்தம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேத்தம்பாளையம் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பாரதி நகர், ஸ்ரீநகர், பாப்பாத்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 380-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால், இந்த பள்ளியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை, பள்ளி கட்டிடம் சேதமடைந்து அபாய கட்டத்தில் உள்ளது. மாணவர்கள் அரசமரத்து அடியிலும், கிணறு பக்கத்திலும் அமர்ந்து கல்வி பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலையில், கேத்தம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பல முறை மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கேத்தம்பாளையம் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பாரதி நகர், ஸ்ரீநகர், பாப்பாத்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 380-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால், இந்த பள்ளியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை, பள்ளி கட்டிடம் சேதமடைந்து அபாய கட்டத்தில் உள்ளது. மாணவர்கள் அரசமரத்து அடியிலும், கிணறு பக்கத்திலும் அமர்ந்து கல்வி பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலையில், கேத்தம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பல முறை மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.