திருப்பூர் : குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் மாதம்தோறும் 10 லிட்டர் பிராந்தி வழங்கப்படும் என திருப்பூரில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதியை அறிவித்துள்ளார்.
திருப்பூர் : குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் மாதம்தோறும் 10 லிட்டர் பிராந்தி வழங்கப்படும் என திருப்பூரில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதியை அறிவித்துள்ளார்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த ஷேக் தாவூத் என்பவர் பனியன் நிறுவனத்தில் தையலராக பணிபுரிந்து வருகிறார். இவர், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதற்கு இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 25 ஆயிரம் ரூபாய் பணம் அரசாங்கத்திடமிருந்து பெற்றுத் தருவேன். அனைவரும் மருந்துக்காக சாப்பிடும் பிராந்தியை பாண்டிச்சேரியிலிருந்து சுத்தமாக இறக்குமதி செய்து, குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் மாதம் தலா 10 லிட்டர் கண்டிப்பாக வழங்கப்படும். குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு நிச்சயமாக அரசு வேலை வழங்கப்படும். ஏழை பெண்களுக்கு 10 சவரன் நகை மற்றும் தனது எம்.பி. நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் ரூபாய் வழங்கி இலவசமாக திருமணம் செய்து வைப்பேன். ஒரு ரூபாய் கூட லஞ்சம் தராமல் இறுதிவரை கக்கனைப் போல பாடுபடுவேன். மேட்டூரில் இருந்து திருப்பூருக்கு வாய்க்கால் வெட்டி குடிநீர் வழங்குவேன், எனக் கூறினார்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த ஷேக் தாவூத் என்பவர் பனியன் நிறுவனத்தில் தையலராக பணிபுரிந்து வருகிறார். இவர், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதற்கு இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 25 ஆயிரம் ரூபாய் பணம் அரசாங்கத்திடமிருந்து பெற்றுத் தருவேன். அனைவரும் மருந்துக்காக சாப்பிடும் பிராந்தியை பாண்டிச்சேரியிலிருந்து சுத்தமாக இறக்குமதி செய்து, குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் மாதம் தலா 10 லிட்டர் கண்டிப்பாக வழங்கப்படும். குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு நிச்சயமாக அரசு வேலை வழங்கப்படும். ஏழை பெண்களுக்கு 10 சவரன் நகை மற்றும் தனது எம்.பி. நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் ரூபாய் வழங்கி இலவசமாக திருமணம் செய்து வைப்பேன். ஒரு ரூபாய் கூட லஞ்சம் தராமல் இறுதிவரை கக்கனைப் போல பாடுபடுவேன். மேட்டூரில் இருந்து திருப்பூருக்கு வாய்க்கால் வெட்டி குடிநீர் வழங்குவேன், எனக் கூறினார்.