குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் 10 லிட்டர் பிராந்தி : குடிமகன்களை கவரும் திருப்பூர் சுயேட்சை வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதி

திருப்பூர் : குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் மாதம்தோறும் 10 லிட்டர் பிராந்தி வழங்கப்படும் என திருப்பூரில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதியை அறிவித்துள்ளார்.

திருப்பூர் : குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் மாதம்தோறும் 10 லிட்டர் பிராந்தி வழங்கப்படும் என திருப்பூரில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதியை அறிவித்துள்ளார். 

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த ஷேக் தாவூத் என்பவர் பனியன் நிறுவனத்தில் தையலராக பணிபுரிந்து வருகிறார். இவர், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதற்கு இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.



இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 25 ஆயிரம் ரூபாய் பணம் அரசாங்கத்திடமிருந்து பெற்றுத் தருவேன். அனைவரும் மருந்துக்காக சாப்பிடும் பிராந்தியை பாண்டிச்சேரியிலிருந்து சுத்தமாக இறக்குமதி செய்து, குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் மாதம் தலா 10 லிட்டர் கண்டிப்பாக வழங்கப்படும். குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு நிச்சயமாக அரசு வேலை வழங்கப்படும். ஏழை பெண்களுக்கு 10 சவரன் நகை மற்றும் தனது எம்.பி. நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் ரூபாய் வழங்கி இலவசமாக திருமணம் செய்து வைப்பேன். ஒரு ரூபாய் கூட லஞ்சம் தராமல் இறுதிவரை கக்கனைப் போல பாடுபடுவேன். மேட்டூரில் இருந்து திருப்பூருக்கு வாய்க்கால் வெட்டி குடிநீர் வழங்குவேன், எனக் கூறினார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...