கோவை : மேட்டுப்பாளையத்தில் நூறாண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு மைதான மாரியம்மன் கோவில் பங்குனி குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோவை : மேட்டுப்பாளையத்தில் நூறாண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு மைதான மாரியம்மன் கோவில் பங்குனி குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் எழுந்தருளியுள்ள நூறாண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு மைதான மாரியம்மன் கோவிலில் 91 ஆம் ஆண்டு பங்குனி குண்டம் திருவிழா கடந்த 5ஆம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது, இதனை அடுத்து கம்பம் நடுதல், கொடியேற்றம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழா நடைபெற்று வந்தன. இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று இரவு முதலே பூக்குண்டம் அமைக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலையில் பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைத்து வரப்பட்டு குண்டம் இறங்கு நிகழ்வு நடைபெற்றது. இதனை அடுத்து, அம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பூக்குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து தலைமைபூசாரி குண்டம் இறங்கி துவக்கிவைத்தார்.

இதனைத்தொடர்ந்து, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிய அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தும் வகையில், முதுகு பகுதியில் வேல் மற்றும் சூலாயுதங்களை குத்தி ஆண்கள்,பெண்கள் என ஏராளமான பக்தர்கள் பவானி ஆற்றில் இருந்து ஊர்வலமாக வந்து குண்டம் இறங்கி வழிபட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் எழுந்தருளியுள்ள நூறாண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு மைதான மாரியம்மன் கோவிலில் 91 ஆம் ஆண்டு பங்குனி குண்டம் திருவிழா கடந்த 5ஆம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது, இதனை அடுத்து கம்பம் நடுதல், கொடியேற்றம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழா நடைபெற்று வந்தன. இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று இரவு முதலே பூக்குண்டம் அமைக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலையில் பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைத்து வரப்பட்டு குண்டம் இறங்கு நிகழ்வு நடைபெற்றது. இதனை அடுத்து, அம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பூக்குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து தலைமைபூசாரி குண்டம் இறங்கி துவக்கிவைத்தார்.

இதனைத்தொடர்ந்து, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிய அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தும் வகையில், முதுகு பகுதியில் வேல் மற்றும் சூலாயுதங்களை குத்தி ஆண்கள்,பெண்கள் என ஏராளமான பக்தர்கள் பவானி ஆற்றில் இருந்து ஊர்வலமாக வந்து குண்டம் இறங்கி வழிபட்டனர்.