மேட்டுப்பாளையத்தில் பழமைவாய்ந்த மைதான மாரியம்மன் கோவில் பங்குனி குண்டம் திருவிழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு

கோவை : மேட்டுப்பாளையத்தில் நூறாண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு மைதான மாரியம்மன் கோவில் பங்குனி குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோவை : மேட்டுப்பாளையத்தில் நூறாண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு மைதான மாரியம்மன் கோவில் பங்குனி குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் எழுந்தருளியுள்ள நூறாண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு மைதான மாரியம்மன் கோவிலில் 91 ஆம் ஆண்டு பங்குனி குண்டம் திருவிழா கடந்த 5ஆம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது, இதனை அடுத்து கம்பம் நடுதல், கொடியேற்றம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழா நடைபெற்று வந்தன. இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று இரவு முதலே பூக்குண்டம் அமைக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலையில் பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைத்து வரப்பட்டு குண்டம் இறங்கு நிகழ்வு நடைபெற்றது. இதனை அடுத்து, அம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பூக்குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து தலைமைபூசாரி குண்டம் இறங்கி துவக்கிவைத்தார். 



இதனைத்தொடர்ந்து, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிய அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தும் வகையில், முதுகு பகுதியில் வேல் மற்றும் சூலாயுதங்களை குத்தி ஆண்கள்,பெண்கள் என ஏராளமான பக்தர்கள் பவானி ஆற்றில் இருந்து ஊர்வலமாக வந்து குண்டம் இறங்கி வழிபட்டனர். 

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...