திருப்பூர் : திருப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையின் மையத் தடுப்பில் கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.
திருப்பூர் : திருப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையின் மையத் தடுப்பில் கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் பிருத்திவிராஜ், கிருஷ்ணகுமார், சந்தோஷ்குமார் உள்ளிட்ட 8 பேர் ஈரோட்டில் உள்ள தங்களது நண்பர் அரவிந்தின் சகோதரி திருமணத்திற்கு காரில் சென்றுள்ளனர். திருமணம் முடிந்து மாலை மீண்டும் கோவைக்கு திரும்பினர். அப்போது, சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகுமார் அதிவேகமாக காரை இயக்கியுள்ளார். இதில், செங்கப்பள்ளி அருகே கார் வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை மையத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பிருத்திவிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், கிருஷ்ணகுமார் பலத்த காயத்துடன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

காரில் பயணித்த சந்தோஷ்குமார் என்பவர் பலத்த காயத்துடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற 5 பேரும் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.