திருப்பூர் அருகே சாலையின் தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து : கல்லூரி மாணவர்கள் இருவர் பலி

திருப்பூர் : திருப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையின் மையத் தடுப்பில் கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.


திருப்பூர் : திருப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையின் மையத் தடுப்பில் கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் பிருத்திவிராஜ், கிருஷ்ணகுமார், சந்தோஷ்குமார் உள்ளிட்ட 8 பேர் ஈரோட்டில் உள்ள தங்களது நண்பர் அரவிந்தின் சகோதரி திருமணத்திற்கு காரில் சென்றுள்ளனர். திருமணம் முடிந்து மாலை மீண்டும் கோவைக்கு திரும்பினர். அப்போது, சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகுமார் அதிவேகமாக காரை இயக்கியுள்ளார். இதில், செங்கப்பள்ளி அருகே கார் வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை மையத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பிருத்திவிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், கிருஷ்ணகுமார் பலத்த காயத்துடன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 



காரில் பயணித்த சந்தோஷ்குமார் என்பவர் பலத்த காயத்துடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற 5 பேரும் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...