கோவை : மேட்டுப்பாளையத்தில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிக்கு, அதற்கான முறையான நிதி ஒதுக்கீடு செய்யப்படாத காரணத்தால் கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கோவை : மேட்டுப்பாளையத்தில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிக்கு, அதற்கான முறையான நிதி ஒதுக்கீடு செய்யப்படாத காரணத்தால் கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட மணி நகர் பகுதியில் உள்ள நகரவை அரசு நடுநிலைப்பள்ளி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து, பள்ளியின் கட்டுமான விரிவாக்கப் பணிகள் மற்றும் புதிய வகுப்பறைகள் அமைப்பதற்கும், இப்பள்ளியில் ஏற்கனவே இயங்கி வந்த ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளியை தனியாக செயல்படவும் நடவடிக்கை எடுக்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. மேலும், பள்ளியின் பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு, புதிய கட்டிடங்களைக் கட்டுவதற்கும், உடனடியாக திட்ட மதிப்பீடு செய்து அறிக்கை அனுப்பவும் அரசு சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.
இதனையடுத்து, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த தேவையான திட்ட மதிப்பீடு மேட்டுப்பாளையம் நகராட்சியால் செய்யப்பட்டு, அவை முறைப்படி அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பல மாதங்கள் கடந்தும் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால், இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் மற்றும் உள்ளூர் மக்கள் கடும் ஏமாற்றத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பள்ளிக்குள் உள்ள பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி தாமதப்படுவதால், இக்கட்டிடம் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. சுற்றிலும் புதர் கிடக்கும் இக்கட்டிடத்தில் காலி மது பாட்டில்களே அதிகம் காணப்படுவதாகவும், பள்ளிக்குள் அடர்ந்த புதர் காரணமாக பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாடுவதாகவும் வேதனை தெரிவிக்கும் மாணவ மாணவிகள், உடனடியாக அரசு அறிவித்தபடி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட மணி நகர் பகுதியில் உள்ள நகரவை அரசு நடுநிலைப்பள்ளி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து, பள்ளியின் கட்டுமான விரிவாக்கப் பணிகள் மற்றும் புதிய வகுப்பறைகள் அமைப்பதற்கும், இப்பள்ளியில் ஏற்கனவே இயங்கி வந்த ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளியை தனியாக செயல்படவும் நடவடிக்கை எடுக்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. மேலும், பள்ளியின் பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு, புதிய கட்டிடங்களைக் கட்டுவதற்கும், உடனடியாக திட்ட மதிப்பீடு செய்து அறிக்கை அனுப்பவும் அரசு சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.
இதனையடுத்து, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த தேவையான திட்ட மதிப்பீடு மேட்டுப்பாளையம் நகராட்சியால் செய்யப்பட்டு, அவை முறைப்படி அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பல மாதங்கள் கடந்தும் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால், இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் மற்றும் உள்ளூர் மக்கள் கடும் ஏமாற்றத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பள்ளிக்குள் உள்ள பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி தாமதப்படுவதால், இக்கட்டிடம் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. சுற்றிலும் புதர் கிடக்கும் இக்கட்டிடத்தில் காலி மது பாட்டில்களே அதிகம் காணப்படுவதாகவும், பள்ளிக்குள் அடர்ந்த புதர் காரணமாக பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாடுவதாகவும் வேதனை தெரிவிக்கும் மாணவ மாணவிகள், உடனடியாக அரசு அறிவித்தபடி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.