மதுக்கரை காவல் ஆய்வாளருக்கு பதிலாக நேர்மையான அதிகாரியை பணியமர்த்தக் கோரி ம.தி.மு.க. மனு

கோவை : மதுக்கரை காவல் ஆய்வாளர் மாவட்ட செயலாளர் போல் செயல்படுவதாகவும், அவருக்குப் பதிலாக நேர்மையான அதிகாரியை பணியமர்த்தக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ம.தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் மனு அளித்துள்ளார்.


கோவை : மதுக்கரை காவல் ஆய்வாளர் மாவட்ட செயலாளர் போல் செயல்படுவதாகவும், அவருக்குப் பதிலாக நேர்மையான அதிகாரியை பணியமர்த்தக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ம.தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் மனு அளித்துள்ளார். 

ம.தி.மு.க மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளிக்க வந்திருந்தார். தேர்தல் பணிகளில் ஆட்சியர் ஈடுபட்டிருப்பதால், அவரது நேர்முக உதவியாளரிடம் மனு அளித்துச் சென்றார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- மதுக்கரை காவல் ஆய்வாளர் தூயமணி ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர் போல் நடந்து கொள்கிறார். தேர்தல் நேரம் என்பதால் அவரை மாற்றி நேர்மையான அதிகாரியை அங்கு பணியமர்த்த வேண்டும், என குறிப்பிட்டிருந்தார். 

இது குறித்து அவர் கூறுகையில், "தற்போது மதுக்கரை காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்று உள்ள தூயமணி, இதற்கு முன்பு பேரூர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் இங்கு பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுங்கட்சிக்கு சாதகமாக ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். மேலும், பொதுக் கூட்டங்களை நடத்த மனு அளிக்கப்பட்டால், கடைசி வரை இழுத்தடித்து அனுமதி மறுப்பதோடு, அங்கு புகார் அளிக்க வருபவர்களை தரக்குறைவாகவும், ஒருமையிலும் பேசுகிறார். தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறி வருகிறார். 

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளும் இவரை மாற்றி, வேறு ஒரு நியாயமான அதிகாரியை அங்கு பணியமர்த்த வேண்டும். மாவட்ட ஆட்சியர் இல்லாத காரணத்தால் மனுவை ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனுவை அளித்து உள்ளோம். உரிய நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் எடுக்க வேண்டும், என்றார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...