கோடை சீசனுக்கு முன்பாக சாலை விரிவாக்கப் பணிகள் முடிவு பெறுமா..? : உதகை மக்கள் எதிர்பார்ப்பு

நீலகிரி : உதகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை விரிவாக்கப் பணிகள் கோடை சீசனுக்குள் நிறைவேற்றப்படுமா..? என்ற எதிபார்ப்பு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி : உதகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை விரிவாக்கப் பணிகள் கோடை சீசனுக்குள் நிறைவேற்றப்படுமா..? என்ற எதிபார்ப்பு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.



குன்னூர் - உதகை சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. 'இச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்,' என பல்வேறு அமைப்பினர் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின், வேலிவியூ சந்திப்பிலிருந்து பிங்கர்போஸ்ட் வரை சுமார் 4.5 கி.மீ., தூரம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்து, 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை நீர் செல்ல கல்வெட்டு மற்றும் தடுப்பு சுவர் அமைக்க 27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 



இப்பணி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்டு நடந்து வருகிறது. இந்நிலையில், தலையாட்டி மந்து, சத்துணவு பஸ் ஸ்டாப், ஆவின் பகுதி, உதகை நகர் பகுதியில் உள்ள சாலைகள் மிக முக்கிய சாலை என்பதால், இதன் விரிவாக்கப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. வரும் மே மாதம் உதகையில் நடைபெறும் கோடை சீசனுக்கு லட்சகணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்பதால், இந்த குன்னூர் உதகை சாலை விரிவாக்கப் பணிகள் அதற்குள் முடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...