நீலகிரி : உதகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை விரிவாக்கப் பணிகள் கோடை சீசனுக்குள் நிறைவேற்றப்படுமா..? என்ற எதிபார்ப்பு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி : உதகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை விரிவாக்கப் பணிகள் கோடை சீசனுக்குள் நிறைவேற்றப்படுமா..? என்ற எதிபார்ப்பு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

குன்னூர் - உதகை சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. 'இச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்,' என பல்வேறு அமைப்பினர் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின், வேலிவியூ சந்திப்பிலிருந்து பிங்கர்போஸ்ட் வரை சுமார் 4.5 கி.மீ., தூரம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்து, 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை நீர் செல்ல கல்வெட்டு மற்றும் தடுப்பு சுவர் அமைக்க 27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இப்பணி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்டு நடந்து வருகிறது. இந்நிலையில், தலையாட்டி மந்து, சத்துணவு பஸ் ஸ்டாப், ஆவின் பகுதி, உதகை நகர் பகுதியில் உள்ள சாலைகள் மிக முக்கிய சாலை என்பதால், இதன் விரிவாக்கப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. வரும் மே மாதம் உதகையில் நடைபெறும் கோடை சீசனுக்கு லட்சகணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்பதால், இந்த குன்னூர் உதகை சாலை விரிவாக்கப் பணிகள் அதற்குள் முடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

குன்னூர் - உதகை சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. 'இச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்,' என பல்வேறு அமைப்பினர் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின், வேலிவியூ சந்திப்பிலிருந்து பிங்கர்போஸ்ட் வரை சுமார் 4.5 கி.மீ., தூரம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்து, 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை நீர் செல்ல கல்வெட்டு மற்றும் தடுப்பு சுவர் அமைக்க 27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இப்பணி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்டு நடந்து வருகிறது. இந்நிலையில், தலையாட்டி மந்து, சத்துணவு பஸ் ஸ்டாப், ஆவின் பகுதி, உதகை நகர் பகுதியில் உள்ள சாலைகள் மிக முக்கிய சாலை என்பதால், இதன் விரிவாக்கப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. வரும் மே மாதம் உதகையில் நடைபெறும் கோடை சீசனுக்கு லட்சகணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்பதால், இந்த குன்னூர் உதகை சாலை விரிவாக்கப் பணிகள் அதற்குள் முடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.