கோவையில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் எஸ் பி வேலுமணி

கோவை : கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாமினை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் துவங்கி வைத்தார்.


கோவை : கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாமினை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் துவங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்று வருகிறது. மேலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்கள் மூலம், 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன்படி கோவை மாவட்டத்தில் கோவை அரசு மருத்துவமனையில் இந்த முகாமினை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் துவங்கி வைத்தார். இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆர்வத்துடன் வந்து சொட்டு மருந்து கொடுத்து செல்கின்றனர். 



மேலும் காலை 8;40 மணியளவில் மட்டும் 340 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் 3.33 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்று கொடுக்கப்படுகிறது. மேலும் கிராமப்புறங்களில் ஆயிரத்து 202 மையங்களும் நகர்ப்புறங்களில் 379 என மொத்தம் 1581 சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 24 மையங்கள் மற்றும் 20 நடமாடும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல பொது சுகாதாரத்துறை மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ரோட்டரி சங்கங்கள் என சுமார் 6 ஆயிரத்து 324 பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று கோவை அரசு மருத்துவமனையில் துவங்கப்பட்ட இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாமணி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன், இருப்பிட மருத்துவ அலுவலர் சௌந்தர் வேல், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அருண்குமார், அம்மன் அர்ச்சுணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...